கண்ணாடி முன் நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்ட லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. கவினுடன் இவரது நெருக்கம் பலவகையிலும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இருப்பினும் இவர் அதை கண்டுக் கொள்ளாமல் தன் பணிகளில் மும்முரமாக இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் என்ன செய்வார் என்ற ஆர்வம் அனைவரிடமும் இருந்து வந்தது.

இந்நிலையில் லாஸ்லியா ப்ரண்ட் ஷிப் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார். மேலும் நடிகர் அர்ஜுனும் நடித்துள்ளார்.

இப்படத்தின் முதல் சுவரொட்டி வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் கண்ணாடி முன்பு நின்று எடுத்த லாஸ்லியாவின் ஃசெல்பி தற்போது இணையத்தில் வெகு வேகமாக பரவி வருகிறது