முன்னணி கலை இயக்குனர் சந்தானம் காலமானார்... திரையுலகத்தினர் அஞ்சலி

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்தவர் T.சந்தானம். இவர் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குனராக டி.சந்தானம் பணியாற்றியுள்ளார்.

அதேபோல் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியாகி வெற்றியடைந்த சர்கார், ரஜினிகாந்த் நடித்த தர்பார் உள்ளிட்ட படங்களிலும் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். குறிப்பாக, ஏ.ஆர். முருகதாஸ் படங்களில் சமீப காலமாக அதிகம் பணியாற்றி வந்தார்.

இறுதியாக ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்தி நடித்துள்ள 1947 என்ற திரைப்படத்திலும் அவர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கலை இயக்குனர் T.சந்தானம் மாரடைப்பு காரணமாக காலமானார். சினிமா துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.