ஒரே படத்தில் நயன்தாராவின் சம்பளத்தை முந்திய நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்திற்கு பின்பு அவருக்கு ஜாக்பாட் அடித்தது. முன்னணி நடிகைகள் பலர் இருக்கும் நிலையில் அவர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நாயகி ஆக அறிமுகமானார். இந்த படம் வெளியாகும் முன்னரே அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் ரவி உத்யவார் இயக்கவுள்ள படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்காக மாளவிகா மோகனன் சுமார் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இந்த படத்திற்காக அவருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் ரூபாய் 5 கோடி என்றும் கூறப்படுகிறது

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவே இப்பொழுதுதான் 3 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். அவர் தான் கோலிவுட் திரையுலகில் அதிகபட்சமாக சம்பளம் வாங்கும் நடிகை. ஆனால் ’மாஸ்டர்’ என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் அடுத்த திரைப்படத்திலேயே நயன்தாராவின் சம்பளத்தை முந்திவிட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி, கோலிவுட் திரையுலகில் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

இதன் காரணமாக மாளவிகா மோகனனின் பாலிவுட் திரைப்படத்திற்கு இப்பொழுதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படத் தொடங்கிவிட்டது.