மார்க் ஆண்டனி 3 நாட்களிலே படம் 35 கோடி வரை வசூல்

வசூலில் மேஜிக் பண்ணிய மார்க் ஆண்டனி ...கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இத்திரைப்படத்தில் சுனில், ரிது வர்மா, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கியமான காதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.

வெளியான முதல் நாளில் இருந்து இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகத்தில் பல திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது. இதனை அடுத்து படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும் படத்தின் இரண்டாவது பாகத்திற்காக காத்திருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.


அந்த வகையில், படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இத்திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 35 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் நாள் வசூலை விட நாளுக்கு நாள் வசூல் அதை விட உயர்ந்து கொண்டே வருகிறது.

தமிழகத்தில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைப்பது போல தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், 3 நாட்களிலே படம் 35 கோடி வரை வசூல் செய்துள்ள நிலையில், வரும் நாட்களில் இன்னும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.