மாவீரன் படம் ஜூலை 14ம் தேதி வெளியாகிறது... இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறதாம்

சென்னை: மண்டேலா பட இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இப்படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.இதன் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

குறிப்பாக படத்தொகுப்பு பணிகளை முடித்துள்ள இயக்குனர் மடோன் அஷ்வின் தற்போது டப்பிங் பணியை தொடங்கியுள்ளார். இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு தனது காட்சிகளுக்கு வசனம் பேசினார்.

சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தை முடித்துவிட்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் திரைப்படத்தின் பணிகளில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டுவருகிறார். இந்த நிலையில் மாவீரன் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துக் கொடுக்க தற்போது அவர் மும்மரம் காட்டி வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இதன் காரணமாக மாவீரன் திரைப்படத்தை அதிகம் எதிர்பார்த்திருக்கிறார். இந்த திரைப்படம் மண்டேலா போல ஒரு அரசியல் பின்னணியில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, இயக்குநர் மிஷ்கின், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.