மீண்டும் அந்த மாதிரி படத்தில் நயன்


நடிகை நயன்தாரா தொடர்ச்சியாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து கொண்டு வருகிறார். இப்போது இருக்கும் இளம் நடிகைகள் பலரும் நயன்தாராவை பார்த்து தான் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் நடித்து கொண்டு வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ், வாணி போஜன் போன்ற நடிகைகள் எல்லாம் நயன்தாராவையே பார்த்து தான் இப்படி பட்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை நயன்தாரா, தற்போது மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இப்படங்களுக்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

எப்போதும் இப்படியான பெண்களுக்கு முக்கிய துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா கடைசியாக ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்திருந்தார். அப்படம் கமர்ஷியல் படம் எனவே, அந்த படத்தை தொடர்ந்து மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களில் நடிப்பதன் மூலம் மீண்டும் பழைய பார்முலாவுக்கு திரும்பி இருக்கிறார்.

இந்த நிலையில், ஏற்கனவே, மண்ணாங்கட்டி, அன்னபூரணி என பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படங்களில் நடிகை நயன்தாரா நடித்து வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். அந்த திரைப்படத்தினை கானா படத்தை இயக்கிய இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்குகிறாராம்.

அருண் ராஜா காமராஜ் கடைசியாக லேபிள் எனும் வெப் தொடர் ஒன்றை இயக்கி இருந்தார். இந்த வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நயன்தாராவை சமீபத்தில் சந்தித்து கதை ஒன்றை அருண் ராஜா காமராஜ் தெரிவித்துள்ளாராம். அந்த கதையும் அவருக்கு மிகவும் பிடித்து போக நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

இதையடுத்து தற்போது அப்படத்திற்கான வேளைகளில் தான் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் பிசியாக இருக்கிறாராம். நயன்தாராவும் தான் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு முடிந்த பின் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிப்பாராம். விரைவில் இத்திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.