படப்பிடிப்பு தளங்களில் அடம்பிடிக்கும் நயன்

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு 2 குழந்தைகளை வாடகை தாய் மூலம் தத்தெடுத்து 2 குழந்தைகளை வளர்த்து வருகிறார். பொதுவாகவே நடிகைகள் திருமணம் முடித்துவிட்டு குழந்தைகளைப்பெற்று கொண்டால் சினிமாவிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்துவிட்டு குழந்தைகளை வளர்ப்பார்கள்.

ஆனால், நயன்தாரா அதனை செய்யாமல் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்துக்கொண்டு இரண்டு குழந்தைகளை கவனித்து வருகிறார். இந்த நிலையில், படப்பிடிப்பு தளங்களில் 12 மணி ஆகி விட்டால் என்றாலே மிகவும் பதட்டம் அடைந்து என்னுடைய காட்சிகளை 5 மணிக்குள் எடுத்துவிடுங்கள் என்று இயக்குனரிடம் கூறுகிறாராம்.

நடிகை நயன்தாரா தற்போது அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் நயன்தாரா இப்படி நடந்துகொள்கிறாராம்.


இதையடுத்து மத்தியான நேரம் ஆகிவிட்டது என்றாலே என்னுடைய காட்சிகளை சீக்கிரம் படம் ஆக்குங்கள் நான் 5 மணிக்கு வீட்டிற்கு செல்லவேண்டும் என்று சொல்கிறாராம். ஏனென்றால், வீட்டில் இரண்டு குழந்தைகள் அவரை தேடுவதால் அதனை பற்றியே படப்பிடிப்பு தளத்தில் நயன்தாரா யோசிக்கிறாராம்.

மேலும் அப்படியே இரவு நேரங்களில் அல்லது மாலை 6 மணிக்கு பிறகு எடுக்கப்படவேண்டிய காட்சிகள் இருந்தாலும் அதில் நடிக்காமல் கிளம்பி விடுகிறாராம். இதனை அடுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக நயன்தாரா இப்படி செய்வது ஒட்டுமொத்த படக்குழுவையும் கடுப்பாக்கி இருக்கிறதாம். இத்தகவலை பிரபல சினிமா தகவலை தெரிவிக்கும் வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.