தனி விமானம் மூலம் காதலர் விக்னேஷ் சிவனுடன் கொச்சி சென்ற நயன்தாரா

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானம் மூலம் திடீரென கொச்சி சென்று உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வரும் நயன்தாரா, தனி விமானம் மூலம் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கொச்சி சென்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கேரளாவில் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடுவதை அடுத்து ஓணம் பண்டிகையை தனது காதலர் மற்றும் குடும்பத்தினர்களுடன் கொண்டாடுவதற்காக நயன்தாரா கொச்சி சென்றதாக தெரிகிறது.

தற்போது பேருந்துகள் ரயில்கள் விமானங்கள் எதுவும் இயக்கப்படாத நிலையில் தனி விமானம் மூலம் காதலருடன் நடிகை நயன்தாரா கொச்சி சென்றதாக சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வைரலாகி வருகிறது.

ஓணம் பண்டிகையை கொண்டாடி முடித்த உடன் சென்னை திரும்பும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தாங்கள் பணிபுரிந்து வரும் படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது விக்னேஷ் சிவன் தற்போது 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தை இயக்க உள்ளார் என்பதும் ’அண்ணாத்த’ உள்பட ஒரு சில படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.