உலா வரும் செய்திகள் வதந்தி; சுல்தான் படத்தயாரிப்பாளர் விளக்கம்

சுல்தான் பற்றி சமூக வலைதளத்தில் உலா வரும் செய்திகள் வதந்தி. அவற்றில் உண்மை ஏதும் இல்லை என்று தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் திரைப்படம் அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளியாகவுள்ளதாகவும், இது காஷ்மோரா போல ஃபேன்டஸி திரைப்படம் என்று தகவல்கள் வெளியானது. மேலும் இப்படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் அவர் மாற்றப்பட்டு, தற்போது விவேக் மெர்வின் இசையமைக்கவுள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் கூறப்பட்டது.

இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில், ”சுல்தான் படம் பற்றி கூறப்படும் இது போன்ற தகவல்கள் எதுவும் உண்மையில்லை” என பதிவிட்டுள்ளார்.

இதனால் சுல்தான் பற்றி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.