ரம்யா பாண்டியனின் வெப்தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிக்பாஸ் நான்காவது சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் முதல் நாள் முதலே சிரித்த முகத்துடன் உள்ளார். யாருடனும் வம்புக்கும் போகாமல் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் சண்டையை முடிந்தவரை தீர்த்து வைக்க பார்க்கிறார். குறிப்பாக 'எவிக்சன் பாஸ்' டாஸ்க்கின்போது சுரேஷ் சக்கரவர்த்தியை புத்திசாலித்தனமாக வெளியேற்றியதும் அதன்பின்னர் அந்த பாஸ் தனக்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருந்தும் அதை ஆஜித்துக்கு விட்டு கொடுத்ததும் அவர்மேல் இருந்த மதிப்பு பல மடங்காக உயர்ந்துள்ளது.

எனவே இப்போதைக்கு ரம்யா பாண்டியன் போட்டியில் இருந்து வெளியேற வாய்ப்பு இல்லை என்பதும் அனேகமாக அவர் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சுரேஷ் சக்கரவர்த்தியே கடுமையான போட்டியாளர் என்று மனதார பாராட்டியது ரம்யாவை மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் உள்ளே படு புத்திசாலித்தனமாக ரம்யா விளையாடி வரும் நிலையில், பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே அவரது படம் ரிலீஸ் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது அவரது ஆர்மியினர்களுக்கு இரட்டை சந்தோஷத்தை கொடுத்துள்ளது. ரம்யா ஏற்கனவே 'முகிலன்' என்ற வெப் தொடரில் நடித்து கொண்டிருந்த நிலையில் அந்த தொடர் அக்டோபர் 30-ஆம் தேதி முதல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் செம்பருத்தி சீரியல் கதாநாயகன் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ளார். ஸ்ரீ ராம்ராம் என்பவர் இந்த வெப்தொடரை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இந்த வெப்தொடர் ரம்யா பாண்டியனுக்கு திரையுலக வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.