ஓவர் கான்பிடென்ட்... ஆனால் நடந்தது வேற போச்சே!!!

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் நானே வருவேன். பொன்னியின்செல்வன் படம் வெளியாவதற்கு முதல்நாள் இந்த படம் வெளியானது. முதல் நாள் பெரிய அளவில் வசூல் இருந்தாலும் பொன்னியின் செல்வன் வசூல் முன்பு மறைந்தே போய்விட்டது என்கின்றனர் கோலிவுட்வாசிகள்.

நானே வருவேன் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முதல் நாள் நல்ல வசூல் வர, இரண்டாவது நாள் வசூல் கடுமையாக குறைந்துள்ளது. காரணம் பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த சிறப்பான வரவேற்புதான். உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்துகிறது இந்த படம். இதனால் தனுஷின் படத்திற்கு வசூல் குறைந்து விட்டது.

பொன்னியின் செல்வன் வருகையால் நானே வருவேன் படத்தின் தியேட்டர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. முதல் நாள் ரூ 10 கோடி வரை வசூல் செய்த நானே வருவேன், இரண்டம நாள் ரூ 4 கோடி வரை தான் வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் வேதனையடைந்துள்ளனர்.

இதே பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகி 10 நாட்களுக்கு பின் இந்த படம் வந்திருந்தால் நிச்சயம் நல்ல வசூல் கிடைத்திருக்கும். ஓவர் கான்பிடெட்டில் படத்தை ரிலீஸ் செய்தது தப்பாக போயிடுச்சு என்கின்றனர் கோலிவுட்வாசிகள்.