குடும்பத்தினருடன் உள்ள பாண்டியராஜன் புகைப்படம் செம வைரல்

சென்னை: நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜனின் மருமகள்களை பார்த்து இருக்கீங்களா. அவர்களின் குடும்ப புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர், இயக்குனர் என தமிழ் சினிமாவில் தனது திறமைகளை காட்டி மக்களின் மனதில் இடம் பிடித்தவர் பாண்டியராஜன். இவர் நடிப்பதற்காகவே திரையுலகிற்கு வந்தார், ஆனால் இவரது உயரத்தின் காரணமாக உதவி இயக்குனராக பணியாற்றினார்.

பின் திரைப்படங்களை இயக்க ஆரம்பித்து அதன்பின்னரே நடிப்பில் நுழைந்தார். தற்போது இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

வாசுகி என்பவரை 1986ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பாண்டியராஜனுக்கு பிரித்திவி ராஜன், பல்லவராஜன் மற்றும் பிரேம் ராஜன் என 3 மகன்கள் உள்ளனர். இதில் இரண்டு மகன்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது.

நடிகர் பாண்டியராஜன் தனது மொத்த குடும்பத்துடன் எடுத்த அழகிய புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகிறது.