சினிமாவில் ஆணாதிக்கம்... நடிகை தமன்னாவின் ஆதங்கம்

சென்னை: ஆணாதிக்கம் நிறைந்துள்ளது... சினிமாவில் ஆணாதிக்கம் நிறைந்துள்ளதாக நடிகை தமன்னா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியாவின் பலமொழிகளில் நடித்து வருகிறார். பலமொழிகளில் நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த அவர், சினிமாவில் பெண்களுக்கு சுத்தமாக மரியாதை இல்லை. பெண்களின் கருத்துக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. சினிமாவில் ஹீரோவுக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி கூட ஹீரோயினுக்கு இல்லை.

படத்தின் நிகழ்ச்சிக்கு ஹீரோ வரவில்லை என்றால் அது ஒரு மாதிரியாகவும், ஹீரோயின் வரவில்லை என்றால் அது ஒரு மாதிரியாகவும் சித்தரிக்கப்படுகிறது.


இந்த நிலை எப்போது சினிமாவில் மாறும் என்று தெரியவில்லை என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். இதே கருத்தை நடிகை ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட சில நடிகைகள் வைத்துள்ளனர். தமன்னாவின் இந்த கருத்து சினிமாவில் விவாதப் பொருளாகியுள்ளது.