காலை உணவுத் திட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு

”சாதனையைச் சாத்தியமாக்கிய மு.க.ஸ்டாலின்” கமல் பாராட்டு ..... கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்திய மாநிலங்களிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். இதனால் வரும்கால தலைமுறை மாணவர்கள் பசியின்றி படித்து முன்னேற முடியு

இதை அடுத்து இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.பாரம்பரிய நெல் ரகங்களையும், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களையும், நாட்டு ரக பழவர்க்கங்களையும் சாகுபடி செய்யும் தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து இந்த திட்டத்தில் பயன்படுத்தினால் மாணவர்களுக்குச் சத்தான சுவையான உணவும் கிடைக்கும்.

விவசாயிகளின் நலன்களும் பாதுகாக்கப்படும். எனவே இதன் மூலம் பாரம்பரிய நெல் வகைகளும், தானியங்களும் பாதுகாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறவும் வாய்ப்புண்டு. இதன் சாத்தியங்களையும் தமிழக அரசு ஆராய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.