வனிதா இல்லை என்றால் நான் இல்லை...பீட்டர் பால் உருக்கம்

சமீபத்தில் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் பீட்டர்பால் திடீரென உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார். இது குறித்து பீட்டர் பால் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:-

அனைவருக்கும் வணக்கம். இரண்டு நாட்களுக்கு முன்னர் எனக்கு திடீரென்று உடல் நலமில்லாமல் போனதால், நான் சென்னை மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வந்தேன். தற்போது பரிபூரணமாக குணமாகி வீடு வந்து திரும்பியுள்ளேன். அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிலையில் நான் வீடு வந்தவுடன் என்னை பற்றிய நிறைய வதந்திகளை பார்த்தேன். அவை எதுவுமே உண்மை கிடையாது. நான் பூரண நலத்துடன் தற்போது வீடு திரும்பியுள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

இன்று நான் உங்கள் முன் நின்று பேசிக்கொண்டு இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் வனிதா தான். இரண்டு நாள் நான் மருத்துவமனையில் இருந்தபோது எனக்கு அம்மா ஸ்தானத்தில் இருந்து என்னை கவனித்துக்கொண்டார். அப்பொழுதுதான் நான் நினைத்தேன் நான் வாழ்க்கையில் எவ்வளவு மிஸ் செய்திருக்கின்றேன் என்று. நான் தனியாக இருந்த காலத்தில் ஹோட்டலில் சாப்பிட்டு ஒரு பேச்சிலர் வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தேன். தனிமையை மிகவும் அனுபவித்தேன். ஆனால் தற்போது எனக்கு உண்மையான பாசம் கிடைப்பதற்கு வனிதாதான் காரணம். அதற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.

வனிதா இல்லை என்றால் நான் இல்லை. அவர்தான் எனக்கு அம்மா மாதிரி அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கின்றார். அதற்காக நான் கடவுளுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று பீட்டர் பால் தெரிவித்துள்ளார்.