கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்கும் போண்டா மணி

இவரும் கதாநாயகன் ஆகிவிட்டாராம்... போண்டா மணி என்று சொன்னால் கூட தெரியாதவர்கள் இருப்பார்கள். ஆனால் வடிவேலு கிட்ட அடி வாங்கும் போண்டாமணி என்று சொன்னால் தெரியாதவர்களே இருக்க முடியாது.

வடிவேலுவின் மிக முக்கியமான காமெடிகள் என்றால் இவரது முகம் பதியாமல் அந்த நகைச்சுவை காட்சி முழுமை பெறாது. இலங்கையில் பிறந்து வளர்ந்த இவர்‌ அங்கு நடந்த உள்நாட்டுப் போர் காரணமாக குடும்பத்தை இழந்தார். பின்னர் ஒரு போர் அகதியாக நமது தமிழ் நாட்டிற்கு வந்தார்.

வந்தாரை வாழவைக்கும் சென்னை இவருக்கு நல்ல ஒரு ஆதரவை கொடுத்தது. இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது சக்கை போடு போட்டு வருகிறார் போண்டா மணி.

தற்போது இவர் எஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிப்பில் ஹீரோவாக களம் இறங்கப் போகிறார் என்ற செய்தி கிடைத்துள்ளது. இயக்குனர் பகவதி பாலா, ஷர்மிளா போன்றவர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். அந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகள் அனைத்தும் வெகு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.