சென்னை; அமெரிக்காவில் பொன்னியின் செல்வன்-1 பெரிய சாதனை படைத்துள்ளது. அங்கு முதல் இரண்டு நாட்களில் 2 மில்லியன் டாலர் வசூலை கடந்து, இன்னும் 1 மில்லியன் டாலர் வசூல் வரவுள்ளதாம். எந்த ஒரு தமிழ் சினிமாவும் தினமும் ஒரு மில்லியன் டாலர் வசூல் இதுவரை வந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் எப்போது பாகுபலி, கே ஜி எப் போல் ஒரு படம் வரும் என காத்திருந்தார்கள். அவர்கள் காத்திருபிற்கு பயனாக பொன்னியின் செல்வன் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்புல் தான். வசூல் வேட்டைதான். இதில்தான் ஒரு பெரிய சாதனையை பொன்னியின் செல்வன் செய்து காட்டியுள்ளது.
அதுவும் அமெரிக்காவில் ஒரு மிகப்பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு முதல் இரண்டு நாட்களில் 2 மில்லியன் டாலர்
வசூலை கடந்து, இன்னும் 1 மில்லியன் டாலர் வசூல் வரவுள்ளது என்று தகவல்கள்
வெளியாகி உள்ளது.
எந்த ஒரு தமிழ் சினிமாவும்
தினமும் ஒரு மில்லியன் டாலர் வசூல் இதுவரை வந்தது இல்லை என்பது
குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை பெரிய சாதனை என்று விபரமறிந்தவர்கள்
பாராட்டுகின்றனர்.