தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப்


பிரதீப் ரங்கநாதனும் லவ் டுடே படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக அதிகரித்துவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து அதன்படி லவ் டுடே படத்திற்கு பிறகு ஒரு 10 நிறுவனம் பிரதீப் ரங்கநாதனிடம் தங்களுடைய நிறுவனத்திற்கு ஒரு படம் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார்களாம்.

ஆனால் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் 20 கோடி கொடுங்கள் நான் நடிக்கிறேன் எனஅதிரடியாக கூறுகிறாராம். இதனால், பிரதீப் ரங்கநாதனிடம் கதை சொல்ல போகும் தயாரிப்பாளர்கள் தெரித்தோடுகிறார்களாம். மேலும், அப்படி தான் தற்போது அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்க கூட 20 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.


இன்னும் இத்திரைப்படத்தினை எந்த நிறுவனமும் தயாரிக்கவும் முன் வரவில்லையாம். படத்தினை தற்காலிமாக கை காசு போட்டு விக்னேஷ் சிவன் தான் தயாரித்து கொண்டு வருகிறாராம். இதற்கு முன்னதாக இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தினை தயாரிக்கவிருந்தது. படத்தின் கதையும் கமல்ஹாசனுக்கு பிடித்துப்போக தயாரிக்க சம்மதம் தெரிவித்தாராம்.

பிறகு பண பிரச்சனை உள்ளிட்ட சில காரணங்களால் அந்த படத்திலிருந்து கமல் நிறுவனம் விலக 7 ஸ்க்ரீன் நிறுவனம் அந்த திரைப்படத்தினை தயாரிக்க முன் வந்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்ற தகவலும் பரவி கொண்டு வருகிறது.