பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், எஸ்.ஜே.சூர்யாவை இயக்கும் விக்னேஷ் சிவன்

சென்னை: மூன்று இயக்குனர்களை இயக்குகிறார் இயக்குனர் விக்னேஷ்சிவன் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

லவ் டுடே படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற பிறகு பிரதீப் ரங்கநாதன் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

இதனை முதலில் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரிக்கின்றார்.

இதில் பிரதீப் ரங்கநாதன் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கின்றார் என ஏற்கனவே வெளியான தகவலைத் தொடர்ந்து இப்போது மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் மிஷ்கின் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், பிரதீப் ரங்கநாதன் என மூன்று இயக்குனர்களை ஒரே படத்தில் வைத்து விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.