நடிகர் சோனுசூட்டிற்கு ஐ.நா.வின் உயரிய விருது வழங்கல்

நடிகர் சோனுசூட்டிற்கு ஐ.நா. விருது... பொதுமுடக்க காலத்தின் போது பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களுக்கு உதவி செய்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்ற பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு ஐ.நா.வின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்தின் போது நடந்தே தங்கள் ஊர்களுக்கு சென்ற மக்களுக்கு, உதவி செய்து அவர்களை சோனு சூட் பேருந்துகளில் அனுப்பி வைத்தார். வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மாணவர்களை சொந்த செலவிலேயே விமானத்தில் இந்தியா அழைத்து வந்தார்.

மேலும்,ட்விட்டரில் பல்வேறு கோரிக்கை வைத்து உதவி கேட்கும் ஏழைகளுக்கு உதவி வந்தார். அவரின் சேவையை பாராட்டி ஐ.நா மேம்பாட்டுத் திட்டத்தின் சிறப்பு மனிதநேய விருது சோனு சூட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பிரியங்கா சோப்ரா, ஏஞ்சலினா ஜூலி, டேவிட் பெக்காம், லியோனார்டோ டிகாப்ரியோ ஆகியோர் பெற்றிருக்கும் இவ்விருதினை சோனு சூட்டும் இப்போது பெற்றுள்ளார்.

கொரோனா தொற்றின் கடினமான சூழலில் மக்களுக்கு மனிதாபிமானத்தோடு உதவியதாலேயே சோனு சூட்டிற்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.