ஒருவர் உள்நோக்கத்துடன் செய்த விஷயமா கொரோனா வைரஸ்? - ரைசா கேள்வி

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு ஆகியவை மட்டுமே தொடங்கி நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படாததால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

பிரபலங்களில் சிலர் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக எந்தவொரு பணியுமே நடைபெறாத ஆதங்கத்தில் ரைசா வில்சன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

எனது வேலை தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதே நேரம் அது எல்லோருக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். என்ன இது கொரோனா? இது ஒரு காரணத்துக்காக இங்கு வந்திருக்கிறதா? மற்றவர்களை விட தனக்கு அறிவு அதிகம், நல்ல விஷயத்துக்காக இதைச் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்ட ஒருவர் உள்நோக்கத்துடன் செய்த விஷயமா இது? நாம் கற்றுக்கொண்டு விட்டோமா? இதைத் தாண்டி வர இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது? என்று தெரிவித்துள்ளார்.