சம்பளத்தை பாதியாக குறைத்த ரகுல் ப்ரீத் சிங்!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்பு எதுவும் நடக்காததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், மகத், நடிகை ஆர்த்தி, இயக்குனர் ஹரி உள்பட பல திரையுலக நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்கள்

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய ரகுல் ப்ரீத்திசிங் தனது சம்பளத்தில் 50% குறைத்து கொள்வதாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மகேஷ்பாபுவுடன் ‘ஸ்பைடர்’, சூர்யாவுடன் ‘என்.ஜி.கே’, கார்த்தியுடன் ‘தேவ்’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ உள்பட பல படங்களில் நடித்த ரகுல், தற்போது ஷங்கரின் ‘இந்தியன் 2’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் ரகுல் ப்ரீத்திசிங் தனது சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளார். இதுவரை அவர் ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கி வந்ததாகவும், தற்போது அவர் ரூ.75 லட்சத்திற்கு நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரகுல் ப்ரீத்திசிங் போலவே முன்னணி நட்சத்திரங்கள் தாங்களாகவே முன்வந்து சம்பளத்தை குறைக்க வேண்டும் என்பதே தயாரிப்பாளர்களின் வேண்டுகோளாக உள்ளது.