பிக்பாஸ் இந்த வாரம் எவிக்சனில் நடிகை ரேகா வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4 விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. நாளொரு சண்டையும், பொழுதொரு புறணியுமாக போட்டியாளர்கள் பண்ணும் அலப்பறைகள் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன. '‘இதெல்லாம் ஸ்க்ரிப்டுங்க, வேற வேலையே இல்ல இவங்களுக்கு...'’ என முதல் நாள் சேனலை மாற்றியவர்கள் கூட, ‘ப்ரோமோ’வில் அனிதா குத்துப்பாட்டுக்கு ஆடுவது போல் காட்டிவிட்டால், மறுநாள் ஷோவுக்குள் திரும்பி விடுகிறார்கள்.
15 நாள் நெருங்கிவிட்ட சீசன் 4-ன் முதல் எவிக்ஷன் நேற்று நடந்தது. இந்த
எவிக்ஷனில் ஷனம் ஷெட்டி, ரேகா, கேப்ரியல், ஷிவானி உள்ளிட்ட சிலர்
நாமினேஷனில் இருந்தார்கள். ஒருவர் வெளியேற வேண்டும். இதில் மக்கள்
ஓட்டுகளின் அடிப்படையில் நடிகை ரேகா வீட்டை விட்டு முதல் நபராக
வெளியேறியுள்ளார். ஷோவிலிருந்து அவர் வெளியேறி கமல்ஹாசனைச் சந்தித்தார்.
பின்னர் அவர் அனைவரிடமும் விடை பெற்றார்.
ரேகா ’பிக் பாஸ்’
ஷோவுக்குள் வந்தபோது பலரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். விஜய் டிவியில்
ஏற்கெனவே ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்ததால், அந்தத்
தொடர்பில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிக்பாஸ்
வீட்டுக்குள் ’யாராவது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே டைனிங் டேபிளைச்
சுத்தம் செய்ய அவர்களை எழுப்பி விடுவது’ போன்ற ரேகாவின் சில நடவடிக்கைகள்,
கமல் சுட்டிக்காட்டும் வரை சென்ற நிலையில் தற்போது ஷோவிலிருந்து
வெளியேறியுள்ளார் ரேகா.