மீண்டும் இணையும் கூட்டணி... ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு

சென்னை: மீண்டும் கூட்டணி சேர்கிறது... நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2019ம் வருடம் வெளியாகிய கோமாளி திரைப்படத்தின் வாயிலாக டிரைக்டராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து அவர் இயக்கிய “லவ் டுடே” படம் நவ…4ம் தேதி வெளியாகி மக்களின் ஆதரவை பெற்றுவருகிறது. இதுவரையிலும் ரூ.20 கோடி வரை இப்படம் வசூலித்து இருக்கிறது.

அத்துடன் தமிழகத்தில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் திரையரங்க எண்ணிக்கை அதிகரித்து வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.


இந்த நிலையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புது படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், இந்த படத்தில் ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் இந்த கூட்டணி இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.