ராஜாராணி 2 சீரியலில் இருந்து ரியா விஸ்வநாத் விலகினார்... இப்போ ஆஷா நடிக்க இருக்கிறாராம்

சென்னை: அடுத்ததாக இன்னொருவர்... பொதுவாக சீரியல்கள் என்றால் அடிக்கடி 'அவருக்கு பதில் இவர்' என சொல்லி நடிகர் நடிகைகளை மாற்றி கொண்டே தான் இருப்பார்கள். ஆனால் விஜய் டிவியின் சீரியலில் தற்போது நடிகர்களை மாற்றுவது அதிகம் நடக்கிறது.

தற்போது ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோயின் சந்தியாவாக நடித்து வந்த ரியா விஸ்வநாத் தற்போது வெளியேறி இருக்கிறார். இனி ராஜா ராணி 2ல் புது சந்தியாவாக நடிகை ஆஷா கௌடா நடிக்க இருக்கிறார்.

அவர் இதற்கு முன் ஜீ தமிழில் கோகுலத்தில் சீதை என்ற தொடரில் நடித்து பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோயினை எதற்காக மாற்றினார்கள் என தற்போது ரசிகர்கள் சீரியல் குழுவினரிடம் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.