சாய்பல்லவி சொன்ன டாப் சீக்ரெட்.. லவ் லெட்டர்..

தமிழில் சில படங்களில் முகம் தெரியாத ரோல்களில் நடித்து நடிகையான சாய் பல்லவி, மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.அந்த படம் தமிழில் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் செம ஹிட் ஆனது.

படம் ஹிட் ஆனதை விட, படத்தில் மலர் டீச்சர் ரோலில் நடித்த சாய் பல்லவி ஒட்டுமொத்த இளைஞர்கள் மனதையும் கவர்ந்து விட்டார்.பிரேமம் படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் தேடப்படும் நடிகையாகி விட்டார் சாய் பல்லவி. தெலுங்கில் இவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகி வருகின்றன.

அதில், விரத பர்வம் படத்தில் வருவதை போல் நிஜ வாழ்க்கையில் யாருக்காவது லவ் லெட்டர் கொடுத்தது உண்டா என சாய் பல்லவியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், படத்தில் டைரக்டர் சொன்னதற்காக லவ் லெட்டர் எழுதினேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரே ஒரு முறை எழுதி உள்ளேன்.

சிறு வயதில், நான் 7 ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு பையனுக்கு லவ் லெட்டர் எழுதி, எங்க அம்மா - அப்பாவிடம் மாட்டி, செம அடி வாங்கினேன் என்றார்.