வைல்டு கார்டு என்ட்ரியில் சனம் ஷெட்டி மீண்டும் வர வாய்ப்பு

வைல்டு கார்டு என்ட்ரியில் சனம் ஷெட்டி மீண்டும் வர வாய்ப்புகள் உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அக்டோபர் 4-ம் தேதி 16 பேருடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில், அர்ச்சனா, சுஜித்ரா ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வருகை தந்தனர். அதில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சுரேஷ் மற்றும் சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த வார நாமினேஷன் லிஸ்டில், ரம்யா பாண்டியன், நிஷா, ஷிவானி, சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் உள்ளனர். கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்ட போது பார்வையாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். ஒரு சிலர் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டதால் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என்றெல்லாம் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டனர்.

ஆரம்பம் முதலே பிக்பாஸ் வீட்டில் யாருடனும் சேராமல் தனித்து விளையாடிய சனம் ஷெட்டியை கமல்ஹாசனும் பிக்பாஸ் மேடையில் பாராட்டியிருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சனம் ஷெட்டி இன்னும் தனது சொந்த வீட்டுக்கு செல்லவில்லை என்றும் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே யாரும் எதிர்பாராத வகையில் சனம் ஷெட்டி மீண்டும் வைல்ட் கார்ட் போட்டியாளராக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த சீசனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் வனிதா வெளியேற்றப்பட்டு சில நாட்களில் மீண்டும் வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்தது போல் இந்த சீசனில் சனம் ஷெட்டி வருவார் என்கின்றனர்.