நாட்டாமை படத்தில் நடிக்க சரத்குமார் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கினாராம்

சென்னை: இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1994ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த நாட்டாமை படத்தில் நடிக்க ரூ.5 லட்சம் தான் சம்பளமாக வாங்கினாராம் நடிகர் சரத்குமார்.

சரத்குமார் இரட்டை வேடத்தில் நடிக்க குஷ்பூ, மீனா, விஜயகுமார், பொன்னம்பலம் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் நாட்டாமை படத்தில் நடித்திருந்தனர்.

எதிர்பார்த்தை விட மாபெரும் வெற்றியடைந்த இப்படம் முழுமையாக ரூ. 50 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாம். மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 5 லட்சம் சம்பளமாக வாங்கினாராம் நடிகர் சரத்குமார். இந்த விஷயத்தை அப்படத்தின் இயக்குனர் கே.எஸ். ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

நாட்டாமை படத்திற்காக ரூ. 5 லட்சம் சம்பளமாக வாங்கிய சரத்குமார் வாரிசு படத்தில் விஜய்க்கு தந்தையாக நடிக்க ரூ. 2 கோடி சம்பளமாக வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.