அட்லி இயக்கத்தில் இரண்டு வேடத்தில் ஷாருக்கான்!

ராஜா ராணி என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அட்லி அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல், மற்றும் பிகில் ஆகிய மூன்று சூப்பர்ஹிட் படங்களை இயக்கினார் இருப்பினும் பிகில் படத்தை அடுத்து ஒரு வருடமாகியும் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கவுள்ள அடுத்த படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் இந்த படம் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் போலீஸ் மற்றும் கிரிமினல் என நாயகன், வில்லன் ஆகிய இரண்டு வேடத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அட்லி இயக்கிய மெர்சல் படத்தில் மூன்று வேடங்களிலும், பிகில் படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் நடித்து இருந்த நிலையில் தற்போது அவருடைய அடுத்தப் படமும் ஒரு டபுள் ஆக்ஷன் படம் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியு உள்ளது.