நயன்தாராவின் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த ஷாரூக்கான்

சென்னை: நயன்தாராவின் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த ஷாரூக்கான் ரசிகர்களை பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடித்த ‘பதான்’ திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உலக அளவில் வசூலில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக உலக அளவில் கவனம் ஈர்த்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருந்த பாகுபலி, கேஜிஎப்-2 ஆகிய படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது.

இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பாலிவுட் கிங், சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான் தற்போது ஜவான் படத்தில் நடித்து வருகிறார். படத்தை அட்லி இயக்குகிறார்.
இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதியும், நகைச்சுவை நடிகராக யோகி பாபுவும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜவான் படத்தின் தயாரிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் ‘பதான்’ படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மும்பையில் இருந்து நேற்று சென்னை வந்தார்.

சென்னை வந்ததும் அவருடன் ஹீரோயினாக நடிக்கும் நயன்தாராவின் வீட்டுக்கு சென்றார். ஷாருக்கானின் வருகையை அறிந்ததும், நயன்தாராவின் குடியிருப்பில் வசிப்பவர்கள் அவருடன் புகைப்படம் எடுக்கத் துடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நயன்தாராவை சந்தித்துவிட்டு நடிகர் ஷாருக்கான் சிறிது நேரம் அவரது வீட்டில் தங்கி அவருடன் பேசிவிட்டு விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதிக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளை பார்த்துவிட்டு சென்றார்.