பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் பங்கேற்க ஷில்பா மஞ்சுநாத்திற்கு ரூ.1 கோடி சம்பளம்?

ரூ.1 கோடி சம்பளமாம்.... பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்காக ஷில்பா மஞ்சுநாத்திடம் சம்பளமாக 1 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஷோ . தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. தமிழில் மூன்று சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது ரசிகர்கள் சீசன் 4க்காக காத்திருக்கின்றனர். சமீபத்தில் அதற்கான புரோமோ வீடியோவை கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்ப உள்ளதாகவும், அதற்கான வேலைகள் மும்முரமாக செயல்பட்டு வருவதாகவும், போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த முறை டிக்டாக்கில் பிரபலமான
இலக்கியா, நடிகை ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி, வனிதா பிரச்சினைகள் மூலம் மீடியாக்களில் பிரபலமான சூர்யா தேவி, விஜய் டிவி தொகுப்பாளரான கோபி நாத், சீரியல் நடிகை ஷிவானி நாராயணன், நடிகை சுனைனா, ஷாலு ஷம்மு, அதுல்யா, சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த இர்பான் உள்ளிட்ட பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 4-ல் ஷில்பா மஞ்சுநாத் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஹரிஷ் கல்யாண் நடித்த 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக 1 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் உண்மையா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.