சின்னத்திரை நடிகர் அர்ணவ் குறித்து வெளியான அதிர்ச்சி அளிக்கும் ஆடியோ

சென்னை: அதிர்ச்சியளிக்கும் ஆடியோ... சின்னத்திரை நடிகர் அர்ணவ் மலேசியா திருநங்கையை காதலித்து ஏமாற்றியதாக அதிர்ச்சியளிக்கும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் திவ்யா, வழக்கறிஞர் பிரியாவுடன், அவர் ஒரு சைக்கோ என்றும் அவன் மீண்டும் மலேசியா வரமுடியாது என அந்த ஆடியோவில் கூறியுள்ளார். அதோடு அர்ணவ் பழைய பாஸ்போர்ட் என்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

அர்ணவ் என்னிடம் இருக்கும் போது மற்ற பெண்களுடன் பேசுவதாகவும், இதன் காரணமாக அவன் முகத்தில் முட்டை அடித்து, இதற்கு பிறகு மலேசியா வரவே கூடாது என கூறியதாக திருநங்கை பிரியதர்ஷிணி கூறியுள்ளார்.

அதோடு அர்ணவ் சென்னையில் கல்லூரி படித்தப்போது என் பின்னால் சுற்றி திரிந்ததாகவும், நீ சென்னை வரவில்லை என்றால் நான் செத்துடுவேன் என கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், தற்போது நிலவி வரும் சூழலில் இந்த ஆடியோவானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.