மீண்டும் இணைகின்றனர் சிம்பு-கௌதம் மேனன்; எதிர்பார்ப்பு எகிறல்

மீண்டும் இணைகின்றனர் சிம்பு-கௌதம் மேனன்... சிம்புவின் சினிமா கேரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது விண்ணைத்தாண்டி வருவாயா. குறிப்பாக காதலர்கள் இந்த படத்தை கொண்டாடி விட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் சிம்பு மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படம் ஓரளவு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு சிம்பு உடல் எடை கூடி சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்தார். தற்போது தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து விட்டு பழைய தோற்றத்திற்கு மாறியுள்ள சிம்புவை தேடி இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் படையெடுக்கிறார்கள்.

அந்த வகையில் தனக்கு ஏற்கனவே ஹிட் கொடுத்த இயக்குனரான கௌதம் மேனன் முதலில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2 ஆம் பாகத்தை உருவாக்க முடிவு செய்தாராம்.

ஆனால் சிம்புவுக்கு அதில் விருப்பம் இல்லாததால் தற்போது வேறொரு கதையில் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். அதில் சிம்புவுடன் வானம் படத்தில் ஜோடி போட்ட அனுஷ்காவை தமிழுக்கு மீண்டும் கொண்டு வருகிறார்களாம். வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.