சமூக வலைத்தளத்தில் என்ட்ரி கொடுத்துள்ள பாடகர் வேல்முருகன்

பாடகர் வேல்முருகன் சமூக வலைத்தளமான ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் என்ட்ரியாகி உள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் வெகுவாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சினிமாவில் பாப்புலரான பின்னணி பாடகரான வேல் முருகனுக்கு முதல் வாய்ப்பு 'சுப்ரமணியபுரம்' படத்தில் தான் அமைந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற 'மதுரை குலுங்க குலுங்க' பாடலை பாடி அசத்தியதை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது.

அதன் பிறகு 'ஆடுங்கடா மச்சான், ஒத்த சொல்லால, சங்கிலி புங்கிலி, ஆம்பளைக்கும் பொம்பளைக்கும், வேணாம் மச்சான், போட்டது பத்தல மாப்பிளை, கொஞ்சும் கிளி, கருப்பு நிறத்தழகி' போன்ற பல பாடல்களை பாடி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

பாடகர் வேல் முருகன், கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

சமீபத்தில், பாடகர் வேல் முருகனுக்கு அடித்த ஜாக்பாட் தான் 'பிக் பாஸ்' சீசன் 4 என்ட்ரி. பின், நவம்பர் 1-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேல் முருகன் எலிமினேட் செய்யப்பட்டார்.

தற்போது, பாடகர் வேல் முருகன் சமூக வலைத்தளமான ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் என்ட்ரியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் பாடகர் வேல் முருகனின் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.