மகன் கொடுத்த அதிர்ச்சி... நடிகர் கார்த்திக் புலம்பல்

சென்னை: மகன் கொடுத்த அதிர்ச்சி... கௌதம் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில்தான் கார்த்திக்கிற்கு அதிர்ச்சியை கௌதம் கார்த்தி கொடுத்துள்ளார்.

கௌதம் கார்த்திக்கிற்கும் நடிகை மஞ்சிமா மோகனுக்கும் திருமணம் நடந்தது. அந்த திருமணத்திற்கு நடிகர் கார்த்திக் தன் திரையுலக நண்பர்கள் அனைவரையும் அழைத்து தடபுடலாக செய்ய வேண்டும் என்று நினைத்தாராம்.

ஆனால், கௌதம் கார்த்திக் அடித்ததே வெறும் 250 பத்திரிக்கை தானாம். அதில் ஒரு பத்திரிகையை அப்பாவுக்கு கொடுக்க கார்த்திக் செம்ம அப்செட் ஆகிவிட்டாராம்.

இதனால் கடுமையான வேதனையில் இருந்த அவர் இதுகுறித்து தன் நண்பர்களிடம் கூறி வேதனைப்பட்டுள்ளாராம்.