அதிக பட்ஜெட் படமாக உருவாகி வருகிறது சூர்யாவின் புதிய படம்

சென்னை; இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் அதிக பட்ஜெட் படமாக உருவாகி வரும் நிலையில், இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் சித்திரைத் திருநாளை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடந்து முடிந்த நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்திற்கு ‘வீர்’ என டைட்டில் வைக்க இயக்குனர் சிவா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் 10 மொழிகளில் வெளியாகும் நிலையில், அனைத்து மொழிகளுக்கும் பொருத்தமான தலைப்பாக இந்த தலைப்பு வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக இப்படம் உருவாகி வரும் நிலையில், இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் சித்திரைத் திருநாளை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது நடக்கும் நிகழ்வுகள் மற்றும் பிரச்சனைகள் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவருக்கு சதித்திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது.