தென்னிந்தியா முழுவதும் நம்பர் 1 பிரபலமாக சூர்யா இடம்பிடித்தார்

மும்பை :மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹ்யூமன் பிராண்ட்ஸ் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பில், தென்னிந்தியா முழுவதும் நம்பர் 1 பிரபலமாக சூர்யா இடம்பிடித்துள்ளார்.

நான்கு தென்னிந்திய மாநிலங்களிலும் நவம்பர் 2022 முதல் டிசம்பர் 2022 வரை 6,000 பேரிடம் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.நம்பிக்கை, அடையாளம், ஈர்ப்பு, மரியாதை போன்றவற்றின் அடிப்படையில் இந்த சர்வே நடத்தப்பட்டது. விஜய், பிரபாஸ் மற்றும் ராம் சரண் போன்ற பிரபலங்களை முந்திக்கொண்டு சிறந்த தென்னிந்திய பிரபலமாக சூர்யா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

தென்னிந்தியாவில் பிரத்தியேகமாக இந்த ஆய்வு நடத்தப்படுவது இதுவே முதல் முறை. தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜுன் மற்றும் விஜய் தேவரகொண்டா இந்த ஆய்வில் நம்பிக்கை நட்சத்திரங்களாக முன்னணியில் உள்ளனர்.

தமிழில் விஜய், சிவகார்த்திகேயன் முன்னணியில் உள்ளனர். . தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ் மற்றும் ராம் சரண் ஆகியோரை பின்னுக்கு தள்ளி, அதிக அங்கீகாரம் பெற்ற நபர்களின் பட்டியலில் சூர்யா முதலிடத்தில் உள்ளார்.

மேலும் தமிழ் திரையுலகில் இவர் விஜய் மற்றும் விஜய் சேதுபதியை விட முன்னணியில் உள்ளார். கன்னட மற்றும் மலையாள சினிமாவில் முறையே யாஷ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முன்னணியில் உள்ளனர். தென்னிந்தியாவின் கவர்ச்சியான நடிகர்கள் பட்டியலில் தெலுங்கு நட்சத்திரங்களான அல்லு அர்ஜுன் மற்றும் விஜய் தேவரகொண்டாவை விட சூர்யா முன்னணியில் உள்ளார். தமிழில் விஜய். மற்ற இரண்டு மாநிலங்களில் துல்கர் சல்மான் நம்பர்-1 ஆக இருந்தார்.

தென்னிந்தியாவின் மிகவும் மரியாதைக்குரிய நட்சத்திரங்களில் சூர்யா முதலிடத்தில் உள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முன்னணியில் உள்ளனர். தமிழில் அஜித், சிவகார்த்திகேனே முன்னணியில் உள்ளனர்.