வாழ்க்கையில் புது புது சவால்களை ஏற்றால்தான் நமக்குள் உள்ள திறமை வெளியே வரும். இது எல்லா துறையினருக்கும் பொருந்தும் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, புதிய படமொன்றில் மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்க உள்ளாராம்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தில் அறிமுகமாகி விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்த சமந்தா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
இவர் அடுத்ததாக நடிக்கும் புதிய படமொன்றில் மாற்றுத்திறனாளியாக நடிக்க
சம்மதம் தெரிவித்து உள்ளார். இந்த படத்தை டாப்சி நடித்த கேம் ஓவர் படத்தை
இயக்கி பிரபலமான அஸ்வின் சரவணன் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய 2
மொழிகளில் இப்படம் தயாராகிறது. இதில் வாய்பேசாத, காது கேட்காத
மாற்றுத்திறனாளி பெண்ணாக சமந்தா நடிக்கிறார். இதற்காக சிறப்பு பயிற்சிகளும்
எடுத்து வருகிறார். திகில் படமாக இது தயாராகிறது.
இதுகுறித்து
சமந்தா கூறும்போது, “வாழ்க்கையில் புது புது சவால்களை ஏற்றால்தான் நமக்குள்
உள்ள திறமை வெளியே வரும். இது எல்லா துறையினருக்கும் பொருந்தும். நடிகையாக
எனக்கு இப்போது எந்தவித பயமும் இல்லை. அடுத்த படத்தில் மாற்றுத்திறனாளி
பெண்ணாக நடிக்கிறேன்.
ஏற்கனவே மகாநதி படத்தில் திக்குவாய் பெண்ணாக
நடித்திருந்தேன். அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததாக எனக்கு
பாராட்டுகள் கிடைத்தது” என்றார்.