சிம்புவின் பத்து தல படத்திற்கு புதுசா அப்டேட் சொன்ன படக்குழுவினர்

சென்னை: புதுசா அப்டேட்... சிம்பு தற்போது ‘பத்து தலை’, ‘கொரோனா குமார்’ படங்களில் நடித்து வருகிறார். பத்து தலை படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய ஓபாலி என்.கிருஷ்ணா இயக்குகிறார்.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். சிம்புவுடன் கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

2017ஆம் ஆண்டு வெளியான கன்னடப் படமான ‘மப்தி’யின் தமிழ் ரீமேக்கான ஏஜிஆர் கேங்ஸ்டர் வேடத்தில் சிம்பு நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இதையடுத்து கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி படத்தின் முதல் பாடல் அறிவிப்பு நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.