அடுத்த மாதம் ரஜினியின் அடுத்த படத்தை தொடங்க தயாராகும் படக்குழு

சென்னை: ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். சூர்யா நடித்த ஜெய்பீம் படத்திற்கு பிறகு டி.ஜே.ஞானவேல் இயக்கும் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தை முடித்த ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலரின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளுக்கு வரவுள்ளது.

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இன்னும் சில நாட்களில் ரஜினி தொடர்பான அனைத்து காட்சிகளையும் படமாக்கி முடித்து விடுவார்கள் என்று தெரிகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். சூர்யா நடித்த ஜெய்பீம் படத்திற்கு பிறகு டி.ஜே.ஞானவேல் இயக்கும் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போலி என்கவுன்டரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னியாகுமரி மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.