கூட்டம் சேரும் ஓட்டு கிடைக்குமா என்று நடிகர் விஜய் வசந்த் கூறியுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2021-ல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க சில மாதங்கள் மட்டுமே உள்ளன. திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், உள்பட ஒருசில கட்சிகள் முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் புதிதாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் தனித்தனியாக களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இருக்கும் திராவிட கட்சிகளை கமல், ரஜினி கட்சிகள் வெல்லுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ரஜினி, கமல் ஆகிய இருவரின் அரசியல் குறித்து மறைந்த கன்னியாகுமரி எம்பியும்
தொழிலதிபருமான வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் கூறியதாவது:
'ரஜினி
கமல் ஆகிய இருவரும் மக்களை சந்திக்க வரும்போது அவர்களை பார்க்க வேண்டும்
என்றுதான் கூட்டம் கூடுமே தவிர அது ஓட்டாக மாறாது என்று கூறினார். மேலும்
ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்கு இப்போது நேரம் சரியில்லை என்றும் அவர்
தெரிவித்துள்ளார். இரு ஜாம்பவான் பற்றியும் நடிகர் விஜய் வசந்த்
பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.