மாமன்னன் படத்தில் சார்லியை நடிக்க வைக்க நினைத்த இயக்குனர்

சென்னை: மாமன்னன் படத்தில் சார்லியை நடிக்க வைக்கலாம் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் நினைத்தாராம்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த ஜுன் 29ம் தேதி வெளியான திரைப்படம் மாமன்னன். படத்தின் கதை ஒரு பக்கம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு பெற இன்னொரு பக்கம் ரசிகர்கள் ஆச்சரியமாக ஒரு விஷயத்தை பார்த்தார்கள்.

இத்தனை வருடம் காமெடி நடிகராக பார்த்து வந்த வடிவேலுவை வேறொரு கோணத்தில் ரசிகர்கள் பார்த்து வியந்தார்கள். இப்படத்திற்காக வடிவேலுவிற்கு கண்டிப்பாக தேசிய விருது எல்லாம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மாரி செல்வராஜ் கதையை எழுதிய பிறகு வடிவேலு நடித்த வேடத்தில் நடிக்க வைக்க முதலில் நினைத்தது சார்லியை தானாம். எதற்கும் வடிவேலுவிடம் ஒருமுறை கேட்டுவிட்டு சார்லியிடம் கேட்கலாம் என நினைத்துள்ளார்கள்.

வடிவேலுவிடம் கேட்டபோது உதயநிதி படமா சரி என்று தயங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார்.