விஜய்யின் 68வது படத்தின் ஓடிடியை இப்போதே கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்

சென்னை: ஆரம்பிக்கவே இல்ல. அதுக்குள்ள அருமையான வியாபாரம் நடந்துள்ளது. விஜய்யின் 68வது படம் குறித்து சூப்பரான தகவல் வந்துள்ளது. படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு மேல் கொடுத்து கைப்பற்றி உள்ளதாம்.

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் படு பிஸியாக நடிகராக வலம் வருகிறார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைந்து லியோ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கின்றன. படப்பிடிப்பை முடித்த கையோடு வெளிநாடு சென்ற விஜய் சமீபத்தில் சென்னை திரும்பினார்.

லியோ பட நேரத்திலேயே விஜய் தனது 68வது படத்திற்கு வெங்கட் பிரபுவுடன் இணைகிறார் என்ற அறிவிப்பு வந்தது. இந்த நிலையில் விஜய்யின் 68வது படம் குறித்து சூப்பரான தகவல் வந்துள்ளது.

படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு மேல் கொடுத்து கைப்பற்றி உள்ளதாம். அதேபோல் இப்படத்தின் ஆடியோ உரிமையை டி-சீரிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

படப்பிடிப்பு, பட பெயர் என எதுவும் ஆரம்பிக்காமலேயே படத்தின் வியாபாரம் ரூ. 100 கோடிக்கு மேல் ஆனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.