அடுக்கடுக்காக எழுந்த கேள்வி... மன்னிப்பு கேட்டு பாதியிலேயே சென்ற இயக்குனர்

சென்னை: உங்களை காயப்படுத்துவது போல் அமைந்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறி மற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பாதியிலேயே சென்றுவிட்டார் இயக்குனர் பிரபு சாலமன். எதற்காக தெரியுங்களா?

மைனா, கும்கி, கயல் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் பிரபு சாலமன். இவர் தற்போது செம்பி என்னும் படத்தை இயக்கியுள்ளார். இதில் அஸ்வின் குமார், கோவை சரளா, தம்பி ராமைய்யா என பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

செம்பி திரைப்படம் இன்று 30ம் தேதி, வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரஸ் ஷோ இன்று நடந்தது. படம் முடிந்து பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு இயக்குனர் பதில் அளித்தார். பிரபு சாலமனிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

செம்பி படம் முடியும் போது ’A film by Jesus' என இயேசுவின் பெயர் வர காரணம் என்ன? நீங்கள் மதத்தை பரப்புறீர்களா?” என பலரும் கேள்வி கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த அவர், ஜூசஸ் மதத்தை பரப்ப வந்தவர் அல்ல. நான் அந்த எண்ணத்தில் இயேசுவின் பெயர் போடவில்லை. உங்களுக்கு தவறாகவோ மற்றும் உங்களை காயப்படுத்துவது போல் அமைந்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறி மற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பாதியிலேயே சென்றுவிட்டார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.