லப்பர் பந்து படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

சென்னை: லப்பர் பந்து படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்... நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடிக்கும் லப்பர் பந்து திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

இளம் ஹீரோக்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் இவர்களுடன் மலையாள நடிகை சுவாசிகா மற்றும் வதந்தி இணைய தொடரில் நடித்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். கிராமப்புறங்களில் பிரபலமான ரப்பர் பந்து கிரிக்கெட் மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகிறது. நகைச்சுவை மற்றும் எமோஷன் ஆகியவற்றிற்கு சம பங்கு இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். சில நாட்களுக்கு முன் படத்தின் பூஜை முடிந்து தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். இதில் அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா மற்றும் பலர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

ஹரிஷ் கல்யாண் தற்போது தோனியின் எல்ஜிஎம் படத்தில் நடித்து வருகிறார். அதன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதை முடித்த பிறகு இந்தப் படத்தில் இணைவார்.

முதலில் படத்திற்கு ஜப்பான் என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் அதே டைட்டில் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கும் வைக்கப்பட்டதால், லப்பர் பந்து என தலைப்பை மாற்றி விட்டனர்.