விஷால்34 படத்தின் கதாநாயகி யார்? படக்குழு அறிவித்தது

சென்னை: விஷால் 34 படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விஷாலுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.
த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் தற்போது ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் நாயகியாக ரிது வர்மா நடித்துள்ளார்.
மேலும் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து விஷாலின் 34வது படத்தை சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார்.


இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்நிலையில் விஷால் 34 படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இதனை படக்குழுவினர் ஒரு போஸ்டரை ஷேர் செய்து அறிவித்துள்ளனர். பிரியா பவானி சங்கர் முதன்முறையாக விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்நிலையில் விஷால் 34 படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இதனை படக்குழுவினர் ஒரு போஸ்டரை ஷேர் செய்து அறிவித்துள்ளனர். பிரியா பவானி சங்கர் முதன்முறையாக விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.