மருத்துவ அறிக்கையில் உண்மை வெளியானது

கொல்கத்தா: மாரடைப்புதான் காரணம்... பின்னணி பாடகர் கேகே என்று அழைக்கப்படுகிற கிருஷ்ணகுமார் கோல்கட்டாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

இவரது மரணம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழி வகுத்தது. இந்நிலையில் தற்போது இவரது மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது.

அதில் கிருஷ்ணகுமாருக்கு ஏற்கெனவே இதயத்திற்கு செல்லும் பிரதான கரோனரி தமனியில் 80 சதவிகித அடைப்பு இருந்திருக்கிறது. இதுவல்லாமல் சிறிய மற்றும் துணை தமணிகளிலும் அடைப்பு இருந்துள்ளது.
ஆனால் எங்கும் 100 சதவிகித அடைப்பு காணப்படவில்லை. நிகழ்ச்சியில் அவர் அதிக உற்சாகம் அடைந்திருக்கிறார். இதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.