நடிகர் விஜய்யின் வாரிசு படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்

சென்னை: நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது .


சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகியது. இந்தப் படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

கதை மிகவும் பழைய கான்சப்ட் என்று பலரும் கழுவி ஊற்றினர். அடுத்ததாக நடிகர் விஜய் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். நேரடியாக தெலுங்கில் உருவாகும் இந்த படம் தென்னிந்திய மொழிகளில் உருவாக்கம் செய்யப்படுகிறது.

இதனை தில் ராஜு தயாரிக்க தமன் இசை அமைக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்க இருக்கிறார். இதில், நடிகர்கள் சரத்குமார், சஷியாம், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடித்த நடிகர் விஜய் 100 கோடிக்கும் அதிகமான சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.


இதனால் தெலுங்கு சினிமாவின் மற்ற முன்னணி நடிகர்களும் தங்களுக்கு அதே அளவு சம்பளம் வேண்டும் என்று பிரச்சனை செய்வதாக கூறப்படுகிறது. இதனால்தான் தயாரிப்பாளர்கள் சங்கம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்து உள்ளனர் என்று கூறப்படுகிறது.