இந்த சஸ்பென்ஸ் என்னைக் கொல்லும்; நடிகை சன்னி லியோன்

அமெரிக்கா அதிபர் தேர்தல் குறித்த செய்திகள் உலகம் முழுவதும் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றுள்ளது. அமெரிக்கர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டு மக்களின் கண்களும் இந்தத் தேர்தலில் கவனம் செலுத்துகின்றன. அனைவரின் மனதிலும் அடுத்த அதிபர் டொனால்டு டிரம்பா..? ஜோ பிடனா...? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் பாலிவுட் நடிகை சன்னி லியோனும் இந்தத் தேர்தலின் முடிவு குறித்து மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். முடிவுகளின் போக்கைக் கருத்தில் கொண்டு, அவர் தொடர்ந்து சஸ்பென்ஸை உணர்கிறார். அவர், கணவர் டேனியலுடன் சேர்ந்து, இந்த நேரத்தில் முடிவுகளை கண்காணித்து வருகிறார்.

அத்தகைய சூழ்நிலையில், அவர் ஒரு வேடிக்கையான பதிவை பதிவு செய்துள்ளார். அதில், கணவர் டேனியல் வெபருடன் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் சன்னி லியோன் பகிர்ந்துள்ளார். படத்தைப் பார்க்கும்போது, ​​சன்னி மற்றும் டேனியல் இருவரும் வாக்களிதுள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும், அதன் தலைப்பில், சன்னி தனது உற்சாகத்தை ஒரு வேடிக்கையான முறையில் வெளிப்படுத்தியுள்ளார். இந்த சஸ்பென்ஸ் என்னைக் கொல்லும். என்று சன்னி பதிவிட்டு உள்ளார். தற்போது சன்னியின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.