அதிக உழைப்பை வாங்கிய படம் வள்ளிமயில்... இயக்குனர் பெருமிதம்

சென்னை: வள்ளிமயில் படம் அதிக உழைப்பை வாங்கி உள்ளது என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'வள்ளி மயில்'. இப்படத்தில் பாரதிராஜா, சத்யராஜ், ஃபரியா அப்துல்லா, சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார்.

80-களின் நாடகக்கலையை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் இயக்குனர் சுசீந்திரன் கூறுகையில், 'இந்த படத்தின் கதையை நான்கு வருடமாக நான் எழுதி வருகிறேன். இந்த படம் நிச்சயமாக இந்திய சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும்.
இது எல்லோரும் எளிதில் ரிலேட் செய்து கொள்ளும் படமாக இருக்கும். இந்த படம் நிறைய உழைப்பை வாங்கியுள்ளது. வள்ளி மயில் கதாபாத்திரத்தில் ஃபரியா நடிக்கிறார். அவர் தான் இந்த படத்தின் உயிர். இது எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. ஆக்‌ஷன், காமெடி, எமோஷன் என அனைத்தும் கலந்த ஒரு நல்ல படைப்பாக இது இருக்கும்' என்றார்.